உ.வே.சாமிநாதையர்
பிறப்பு : 19 குடத்திங்கள் 1855.
நீத்தல்: 28 மேழம் 1942.
இடம்: சூரியமூலை, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாநகரம்
பணி: பதிப்பாளர்.
அறியப்படுவது : அழிநிலை நூல்களைப் பதிப்பித்தமை/ தமிழறிஞர்/ தமிழ்த்தாத்தா
உ.வே.சாமிநாதையர் அவர்களைச் சுருக்கமாக உ.வே.சா என்று அழைப்பர்.இவர் எல்லோராலும் சிறப்பாகத் தமிழ்த் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும்,செழுமையையும் அறியச் செய்தவர்.
தமிழர்கள் மறந்து போன ஒரு தமிழறிஞர்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை,பத்துப்பாட்டு,எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்றழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதையர்.
சுமார் 3000-க்கும் கூடுதலான ஏட்டுச் சுவடிகளையும் ,கையெழுத்தேடுகளையும் காப்பகப்படுத்தியிருந்தார்.
இவர் மட்டும் இல்லையென்றால் தமிழர்களுக்கு இன்று தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி எதுவுமே தெரிந்திட வாய்ப்புகளில்லை.
உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை ‘என் சரிதம்’ என்று ஆனந்த விகடன் கிழமை இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார்.
இது 1950-ம் ஆண்டில் தனி நூல் வடிவம் பெற்றது. இந்நூலின் கையடக்க ஆவண வடிவமைப்புகள் கணிணியில் ஏராளமாக உள்ளன.
இன்றைக்காவது உ.வே.சாவின் ‘என் சரித்திரம்‘ படித்துப் பார்த்து அவருக்கு நாம் நன்றி செலுத்துவோம்.
தமிழ் பல ஆண்டுகள் வாழ்ந்திட,உயர்திரு. உ. வே. சாமிநாதையர் (தமிழ்த் தாத்தாவின் )
அருஞ்செயலால் எமக்குக் கிடைத்த நூல்கள்..
உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள்!!
நூல்களின் பெயர் ; பதிப்பித்த ஆண்டு ; முறையே ..
1.நீலி இரட்டை மணிமாலை 1874.
2.வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878.
3.திருக்குடந்தைப் புராணம் 1883.
4.மத்தியார்ச்சுன மான்மியம் 1885.
5.சீவக சிந்தாமணி 1887.
6.கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது 1888.
7.திருமயிலைத் திரிபந்தாதி 1888.
8.பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889.
9.தண்டபாணி விருத்தம் 1891.
10.சிலப்பதிகாரம் 1892.
11.திருப்பெருந்துறைப் புராணம் 1892
12.புறநானூறு 1894
13.புறப்பொருள் வெண்பா மாலை 1895
14.புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் 1898
15.மணிமேகலை 1898
16.மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
17.ஐங்குறுநூறு 1903
18.சீகாழிக் கோவை 1903
19.திருவாவடுதுறைக் கோவை 1903
20.வீரவனப் புராணம் 1903
21.சூரைமாநகர்ப் புராணம் 1904
22.திருக்காளத்தி நாதருலா 1904
23.திருப்பூவண நாதருலா 1904
24.பதிற்றுப் பத்து 1904
25.திருவாரூர்த் தியாகராச லீலை 1905
26.திருவாரூருலா 1905
27.திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 1906
28.தனியூர்ப் புராணம் 1907
29.தேவையுலா 1907
30.மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
31.திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 1908
32.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு 1910
33.திருக்காளத்திப் புராணம் 1912
34.திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
பரிபாடல் 1918
35.உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
36.பெருங்கதை 1924
37.நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
38.நன்னூல் மயிலை நாதருரை 1925
39.சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
40.தக்கயாகப் பரணி 1930
41.தமிழ்விடு தூது 1930
42.பத்துப் பாட்டு மூலம் 1931
43.மதுரைச் சொக்கநாதர் உலா 1931
44.கடம்பர் கோயிலுலா 1932
45.களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை 1932
46.சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 1932
47.பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
48.பழனி பிள்ளைத் தமிழ் 1932
49.மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை 1932
50.வலிவல மும்மணிக் கோவை 1932
51.சங்கரலிங்க உலா 1933
52.திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933
53.பாசவதைப் பரணி 1933
54.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – பகுதி 1 1933
55.சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
56.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – பகுதி 2 1934
57.விளத்தொட்டிப் புராணம் 1934
58.ஆற்றூர்ப் புராணம் 1935
59.உதயண குமார காவியம் 1935
60.கலைசைக் கோவை 1935
61.திரு இலஞ்சி முருகன் உலா 1935
62.பழமலைக் கோவை 1935
63.பழனி இரட்டைமணி மாலை 1935
64.இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1936
65.கனம் கிருஷ்ணயைர் 1936
66.கோபால கிருஷ்ண பாரதியார் 1936
67.திருநீலகண்டனார் சரித்திரம் 1936
68.திருமயிலை யமக அந்தாதி 1936
69.திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
70.நான் கண்டதும் கேட்டதும் 1936
71.புதியதும் பழையதும் 1936
72.புறநானூறு மூலம் 1936
73.பெருங்கதை மூலம் 1936
74.மகாவைத்தியநாதையைர் 1936
75.மான் விடு தூது 1936
76.குறுந்தொகை 1937
77.சிராமலைக் கோவை 1937
78.தமிழ்நெறி விளக்கம் 1937
79.திருவாரூர்க் கோவை 1937
80.நல்லுரைக் கோவை பகுதி 1 1937
81.நல்லுரைக் கோவை பகுதி 2 1937
82.நினைவு மஞ்சரி – பகுதி 1 1937
83.அழகர் கிள்ளை விடு தூது 1938
84.சிவசிவ வெண்பா 1938
85.திருக்கழுக்குன்றத்துலா 1938
86.திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை 1938
87.திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
88.நல்லுரைக் கோவை பகுதி 3 1938
89.குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 1939
90.தணிகாசல புராணம் 1939
91.நல்லுரைக் கோவை பகுதி −4 1939
92.புகையிலை விடு தூது 1939
93.மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
94.கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
95.திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
96.வில்லைப் புராணம் 1940
97.செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
98.நினைவு மஞ்சரி – பகுதி 2 1942
99.வித்துவான் தியாகராச செட்டியார் 1942
நன்றி .





