இலக்கணம்தமிழ்

ஏகாரயிடைச்சொல்.

புணரிலக்கணம்.

ஏகாரயிடைச்சொல்.

தேற்றம், வினா, எண், பிரிநிலை, எதிர்மறை, இசைநிறை, ஈற்றசையென ஏழுபொருளை ஏகாரயிடைச்சொல் தரும். இவ்வரிசையில் எடுத்துக்காட்டுகள் வருமாறு.

• ‘கடவுள் உண்டே.’ இத்தொடரில் கடவுள் உண்டெனும் தேற்றப்பொருளை ஏகாரம் தருவதால் தேற்றம். தேற்றம் = தெளிவு.

• ‘நீயே எடுத்தாய்.’ இத்தொடர் ‘நீயா எடுத்தாய்’ என்னும் வினாப்பொருளைத்தந்தால் வினா. இவ்வழக்கு இக்காலத்தில் நடைமுறையில் இல்லை; இலக்கியவழக்காயிற்று.

• ‘ஒன்றேகால்.’ இத்தொடரில் ஒன்றுடன் காலைக்கூட்டுக என்னும் எண்ணுப்பொருள்தருதலால் எண்.

• ‘அவருள் முருகனே நல்லவன்.’ இத்தொடரில் ஒரு கூட்டத்திலிருந்து ஒருவனைப்பிரித்து நிற்பதால் பிரிநிலை.

• ‘நானே கொண்டேன்.’ இத்தொடரில் ‘நான் கொள்கிலேன்’ என்னும் எதிர்மறைப்பொருளை தந்தால் எதிர்மறை. இவ்வழக்கு இக்காலத்தில் நடைமுறையில் இல்லை; இலக்கியவழக்காயிற்று.

• ‘ஏயே இவள் அழகி’ என்றனர். இத்தொடரில் ஏகாரம் வேறுபொருளன்றி இசைநிறைத்து நிற்றலால் இசைநிறை.

• ‘கடவுளை ஏத்தித்தொழுவோமே.’ இத்தொடரில் ஏகாரம் எப்பொருளின்றி ஈற்றிலே சார்ந்து நிற்றலால் ஈற்றசை.

ஏகாரயிடைச்சொல்லினை  வருமொழியொடு புணர்த்தாது பிரித்துநிறுத்துவது உரைநடைக்கு ஏற்றது. இலக்கியநயத்துடன் தொடரொலிப்பின்பொருட்டு பொருள்திரியாது புணர்த்துங்கால் புணரும்; புணர்த்தலாம்.

தொடர்வோம்.

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.

நன்றி.

வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button