படைப்புகள்

“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.

பாவலர் : விமலாதேவி

* பூவழகே பூவழகே – உன்

   பூவிதழ் பல நூறழகே !

* பொன்னழகே பொன்னழகே

  பொன்னை விட நீயழகே !

* உச்சி முகர்ந்தேனடி – உன்

உச்சி துடிக்கையில் வேர்த்தேனடி!

* கண்ணயர்ந்து நீ துயிலயிலே,

கனவுலகை வெல்வாயடி!

* மண்ணுலகம் நீ வந்தாயடி!

விண்ணுலகம் போற்ற வாழ்வாயடி!

* நாளை நீ உலகம் வெல்ல,

இன்று கண்ணுறங்கு கண்மணியே!

* வையத்தில் வஞ்சனைகள் நிறைந்திருக்க,

* வாஞ்சனையால் நீ மாற்றுவாயடி!

* தமிழ்த்தேனே நீ கண்ணுரங்கு,

தமிழ் மகளாய் வளர்வாய் நாளை இங்கு !

         கவிதாயினி விமலாதேவி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button